25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
விளையாட்டு

ஹசரங்கவை தட்டித் தூக்கிய ஐபிஎல் அணி எது தெரியுமா?

ஐபிஎல் 14 ஆவது சீசன் ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்ற நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் உள்ளிட்ட சில வீரர்களுக்கு நோய் கண்டறியப்பட்டதால் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 29 போட்டிகள்தான் நடத்தப்பட்டது. 31 போட்டிகள் எஞ்சியிருந்தது.

மீதமுள்ள இந்த 31 போட்டிகளும் எப்போது நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது.

தொடர்ந்து, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கொல்கத்தா அணி வீரர் பேட் கம்மின்ஸ், பஞ்சாப் அணியின் ரிலே மெரிடித் மற்றும் ஜெய் ரிச்சர்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணியின் கேன் ரிச்சர்ட்சன் உறுப்பினர்கள் ஐபிஎல் 14 ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்தனர்.

அதேபோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, பின் ஆலன், டேனியல் சாம்ஸ் ஆகிய நான்கு பேர் ஐபிஎல் 14 ஆவது சீசனின் எஞ்சிய லீக் போட்டிகளில் பங்கேற்கமாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மாற்று வீரரை ஆர்சிபி அணி தேர்வு செய்துள்ளது.

ஆர்சிபி அணியில் ஆடம் ஜம்பாவுக்கு மாற்றாக இலங்கையைச் சேர்ந்த ஸ்பின்னர் வானிந்து ஹசரங்கா சேர்க்கப்படுவார் என சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அந்த தகவல் தற்போது, ​​அணி நிர்வாகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா, இலங்கை இடையே டி 20 தொடரில் ஹசரங்கா அபாரமாக பந்துவீசி 5.58 ஏகனாமியுடன் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியிருந்தார். இவர், ஐசிசி டி 20 பௌலர்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

Leave a Comment