கோலி தன் தவறை திருத்தியே ஆகணும்: கவாஸ்கர் அட்வைஸ்!

Date:

இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 2019ஆம் ஆண்டில் 8 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற கோலி 2 சதங்கள் உட்பட 68 சராசரியுடன் 612 ரன்கள் குவித்தார்.
அடுத்து 2020ஆம் ஆண்டில் 3 டெஸ்ட்களில் விளையாடிய கோலி 19 சராசரியுடன் வெறும் 116 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதைவிட மிகமோசமாக, 2021ஆம் ஆண்டில் தற்போதுவரை 6 டெஸ்ட்களில் விளையாடி 2 அரை சதம் மட்டும் அடித்து 25 சராசரியுடன் 229 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

2018ஆம் ஆண்டில் 10 டெஸ்ட்களில் 4 சதம், 2 அரை சதம் உட்பட 1036 ரன்கள் குவித்த கோலி, அடுத்த மூன்று வருடங்களில் (2019, 20, 21) 17 டெஸ்ட்களில் மொத்தம் 2 சதம், 5 அரை சதம் உட்பட 957 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதாவது 2018ஆம் ஆண்டு அடித்த ரன்களுடன் ஒப்பிடும்போது, அடுத்த மூன்று ஆண்டிகளில் சேர்த்து அடித்த ரன்கள் குறைவு. இது கோலியின் சரிவைக் காட்டுகிறது. அடுத்து இங்கிலாந்து எதிரான எஞ்சிய மூன்று டெஸ்ட்களில் சதம் விளாசி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள
இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், கோலி தொடர்ந்து சொதப்புவதற்கான காரணம் குறித்துப் பேசியுள்ளார். “இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின், இரண்டாவது இன்னிங்ஸில் சாம் கரன் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்தது எனக்கு அதிருப்தியளிக்கிறது. சிறந்த பேட்ஸ்மேன். டெஸ்டில் 8000 ரன்களுக்குமேல் விளாசியவர். இருப்பினும், அவர் விளையாடும் நுட்பம் எனக்குத் திருப்திகரமாக இல்லை. பேக் அண்ட் கிராஸில் அவர் சரியாக விளையாடத் திணறி வருகிறார்” என்றார்.
மேலும் பேசிய கவாஸ்கர், “அவுட் சைட் ஆஃப் ஸ்மெட்பிற்கு வெளியே செல்லும் பந்தை ஆடும் கோலியின் பேட்டிங் முறை மோசமாக இருக்கிறது. விரைவாகப் பேட்டை நகர்த்தி, சில நேரங்களில் காலையும் நகர்த்தி வேகமாக ஆட்டமிழந்து விடுகிறார். இதன்மூலம், கோலியின் பேட்டிங் நுட்பத்தில் கோளாறு இருப்பது தெரிய வருகிறது. பெரிய பேட்ஸ்மேன்கள் பலர் தனித்தன்மையுடன் செயல்படுவார்கள். தனி நுட்பம் வைத்திருப்பார்கள். ஆனால், கோலியிடம் அப்படி இருப்பதுபோல் தெரியவில்லை. ஒருநாள், டி20யைப் போல் டெஸ்ட் கிடையாது. பழங்கால முறைப்படி விளையாடினால் மட்டுமே நிலைத்து நின்று விளையாட முடியும்” எனக் கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்