‘சிம்பு, பிரபுதேவா செய்ததை விக்னேஷ் சிவன் செய்யவில்லை’: காதலிற்கு காரணம் சொல்லும் நயன்தாரா!

Date:

நயன்தாரா இதுவரை சில நடிகர்களுடன் காதல் உறவில் இருந்துள்ளார். ஆனால், விக்னேஷ் சிவனுடனான காதலை மட்டும் சமீபத்திய பேட்டியில் புகழ்ந்துள்ளார் நயன்தாரா.

சினிமா துறையில் நடிக, நடிகையர்களிற்குள் காதல் வருவது சாதாரண விஷயம். அந்த வகையில் நயன்தாரா தன்னுடைய கரியரின் ஆரம்பத்தில் சிம்புவுடன் காதலில் இருந்தார்.

அது முறிந்த பின்னர், பிரபல நடிகையாக வலம் வரும்போது, பிரபுதேவாவை காதலித்தார். பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக சினிமாவை விட்டே சில வருடங்கள் விலகியிருந்தார். ஆனால் அந்த காதலும் முறிந்தது.

அதனை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவனை நீண்டகாலமாக காதலித்து வருகிறார். இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக தெரிவித்துள்ளார் நயன்தாரா. மேலும் விக்னேஷ் சிவனை நான் ஏன் இவ்வளவு காதலிக்கிறேன்  என்பதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

நயன்தாரா கூறுகையில், இதுவரை நான் பார்த்த ஆண்கள் பெரும்பாலும் பெண்களின் வளர்ச்சியை தடுக்கும் சக்தியாகவே இருந்துள்ளனர், குடும்பத் தலைவியாக இருந்தால் மட்டுமே போதும் என நினைக்கிறார்கள். ஆனால் விக்னேஷ் சிவன் மட்டும்தான் பெண்கள் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள முடியும், அதேநேரம் வேலையிலும் சாதிக்க முடியும் என்பதை எனக்கு புரிய வைத்தார் என்றும், அவருடைய இந்தப் புரிதல்தான் அவர் மீதான காதலை எனக்கு அதிகப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.

நயன்தாரா கூறியதை வைத்து பார்க்கையில், சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகிய இருவருமே திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என கட்டளை போட்டிருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்