உதவி செய்யுங்க என கண்ணீர் மல்க பேசிய கர்ணன் படப் பாடலை பாடிய பாட்டி.

Date:

தனுஷ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான கர்ணன் படத்தில் இடம்பெற்ற ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் மூலம் பிரபலமானவர் மாரியம்மாள். சிவகங்கை மாவட்டம் கிடக்குழி என்ற கிராமத்தில் பிறந்தவர் மாரியம்மாள். அதனாலேயே, அவரது பெயர் கிடக்குழி மாரியம்மாள் என்று அழைக்கப்படுகிறார்.

மாரியம்மாள் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்களை பாடியுள்ளார். தென் மாவட்டங்களில் மாரியம்மாளின் நாட்டுப்புற பாடல்கள் பிரபலம். தமிழ் சினிமாவில், வெடிகுண்டு முருகேசன், மாதவனும் மலர்விழியும், மதுரை சம்பவம், களவாணி 2 ஆகிய படங்களில் பாடி இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னரே கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அவர் மகளுக்கு திருமணமாகி பேரன் பிறந்த நிலையில், மருமகனும் காலமானார். மகள், பேரனுடன் தனியாக வசித்து வந்தார். மாரியம்மாள் பேரனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சைக்கான சென்னைக்கு குடி பெயர்ந்தார்.

இந்த சூழ்நிலையில் தான் கர்ணன் படத்தில் தற்போது இவர் பிரபலமானார். ஆனால் சினிமாவில் இவர் பாடல் பாடிய படங்கள் பலவும் வெளியிடாமல் முடங்கியுள்ளன. இதனால் பணம் எதுவும் கைக்கு வரவில்லை. கையில் இருந்த பணமும் பேரனுக்கு சிகிச்சை பார்த்து கரைந்துவிட்டதால் சொந்தமாக இருந்த வீட்டையும் சிகிச்சைக்கு பணமில்லாமல் விற்றுவிட்டார். நோய், தொழில் நஷ்டம் என கடுமையன நிதி நெருக்கடியால் வாடும் அவர், கடந்த மூன்று மாதங்கள் வீட்டு வாடகை கூட கொடுக்கவில்லை. இன்னும் எத்தனை கஷ்டங்களை நான் தாங்குவேன், முடிந்தவர்கள் உதவிகளை செய்யுங்கள் என் பேரனை எப்படியாவது காப்பாற்றி கொடுங்கய்யா என்று ஒரு பேட்டியில் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்