திமுகவினர் இடையே மோதல்: பலர் படுகாயங்களுடன்!

Date:

சிவகங்கை தொண்டி சாலையில் குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு மற்றும் நிர்வாகப் பொறியாளர் அலுவலகங்கள் ஒரே கட்டிடத்தில் உள்ளன. நேற்று நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தில் 27 குடிநீர் பராமரிப்புப் பணிகள், கண்காணிப்புப் பொறியளார் அலுவலகத்தில் 6 குடிநீர் பராமரிப்புப் பணிகள் என 33 பணிகள் ரூ.3.5 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டன.

இதில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தரப்பினருக்கும், சிவகங்கை ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சோமன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு மோதலாக மாறி, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் சோமனின் மண்டை உடைந்ததால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் எதிர் தரப்பினரின் காரை சேதப்படுத்தினர். போலீஸார் இரு தரப்பினரையும் சமரசப் படுத்தினர். காயமடைந்த சோமன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

 

spot_imgspot_img

More like this
Related

விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதி முடிவு விரைவில்

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதித் தீர்ப்பு,...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புதிய வாகன பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள்,...

சங்கானையில் வீட்டுக்குள் இளைஞர் சடலமாக மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்