தந்தையை அடித்தே கொன்ற மகன்!

Date:

திருகோணமலை – பாலையூற்று பகுதியில் மகனின் தாக்குதலினால் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தந்தை சிகிச்சை பலனின்றி நேற்று (08) உயிரிழந்தார்.

பாலையூற்று மயான வீதியில் வசித்துவரும் பொன்னத்துரை ராஜா (60) என்பரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி இரவு 9 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து தந்தை மீது மகன் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் தலையில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை தொடர்ந்து மகன் தலைறைவாகி விட்டார். அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் ட்ரம்ப்

அடுத்த மாதம் முதல் பல்வேறு கனேடியப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக...

சவுதி மீது கடல்வழி முற்றுகையை அறிவித்த ஹூதிகள்: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான்!

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து,...

ஹூதிகளின் கடல்வழி முற்றுகையை கடுமையாக சாடிய சவுதி!

ஈரான் ஆதரவு ஹூதி போராளிக் குழு, சவூதி அரேபியாவிற்கு எதிராகக் கடற்படை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்