நேற்று 2,956 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 329,994 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தொற்றாளர்களில் 2,956 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் நாட்டிற்கு வந்த ஐந்து பேருக்கும் நேற்று கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நாடு முழுவதும் 31,526 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 2,563 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 293,357 ஆக உயர்ந்துள்ளது.
COVID-19 தொற்று சந்தேகத்தில் 2,796 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.




