திருகோணமலை – பாலையூற்று பகுதியில் மகனின் தாக்குதலினால் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தந்தை சிகிச்சை பலனின்றி நேற்று (08) உயிரிழந்தார்.
பாலையூற்று மயான வீதியில் வசித்துவரும் பொன்னத்துரை ராஜா (60) என்பரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி இரவு 9 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து தந்தை மீது மகன் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் தலையில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலை தொடர்ந்து மகன் தலைறைவாகி விட்டார். அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




