வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலி… கடையில் நின்ற பெண்ணை தள்ளிவிழுத்தி தாலி: பட்டப்பகலில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை! (CCTV)

Date:

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு இடங்களில் அடுத்தடுத்து சங்கிலி, தாலி அறுத்த மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

இன்று காலை இந்த சம்பவம் நடந்தது.

மாலைசந்தி பகுதியில் காலை 10.25 அளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவரின் தங்கச்சங்கிலி அறுக்கப்பட்டது. இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் சங்கிலி அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அவர் தங்கச்சங்கிலியை இறுகப்பிடித்ததால், ஒரு பகுதி மட்டுமே திருடர்களின் கையில் சென்றது.

அந்த இளைஞர்கள் பருத்தித்துறை வீதியினால் யாழ்ப்பாணம் நோக்கி சென்றனர். 10.35 மணியளவில் புறாப்பொறுக்கி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்த இளம்பெண்ணொருவரை நிலத்தில் தள்ளிவீழ்த்தி, தாலியை அறுத்து சென்றனர். அந்த பெண் தாலியை இறுக பிடித்ததால், தாலியின் பெரும் பகுதி அவரது கையிலேயே இருந்தது.

இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களையும் அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்