சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்தை வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச இதனை தெரிவித்தார்.
இந்த சட்டமூலத்திற்கு ஆளும் பெரமுன கூட்டணிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதும், அதில் 4 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென சு.க பரிந்துரை முன்வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.




