அசோசியேட்டட் பிரஸ் ஊடக நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவரான டெய்சி வீரசிங்கம் (51) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 1, 2022 முதல் அவர் அந்த பொறுப்பை வகிப்பார்.
டெய்ஸி வீரசிங்கம் அசோசியேட்டட் பிரஸ் ஊடக நிறுவனத்தில் தற்போது நிர்வாக துணைத் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரியாக பதவி வகிக்கிறார்.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைமுறை பிரிட்டிஷ் குடியுரிமையை கொண்ட டெய்ஸி வீரசிங்கம், அசோசியேட்டட் பிரஸ்ஸை வழிநடத்தும் முதல் பெண், வெளிநாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




