பொதுச்சுகாதார பரிசோதகரின் முகத்தில் துப்பியவர் கைது!

Date:

கிரிவுல, புஸ்கொலதெனிய பகுதியில் கொரோனா தொற்றாளரின் வீட்டுக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர் மீது, தொற்றாளரின் தந்தை எச்சில் துப்பியுள்ளார்.

சம்பவத்தின் போது சந்தேக நபர் மது போதையில் இருந்ததுள்ளார்.

அந்த வீட்டில் கொரோனா நோயாளி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொதுச்சுகாதார பரிசோதகர் அங்கு சென்றார். இதன்போது, சுகாதார பரிசோதகரை தாக்க முயன்ற கொரோனா தொற்றாளரின் தந்தை, அவரது முகத்தில் எச்சில் துப்பினார்.

48 வயதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி அதுரகம, பண்டாரகமவில் இதே போன்ற ஒரு சம்பவம் பதிவாகியது. அதில் தொடர்புடையவருக்கு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...

BYD கார் காட்சியறை திறப்பு மட்டக்களப்பு

ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் BYD கார் விற்பனை நிலையத்தின்...

காரைதீவில் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் “மக்கள் உணவகம்” திறப்பு

காரைதீவு கல்முனை பிரதான வீதியில், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு எதிரில், "1967...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்