திருகோணமலை -10 ம் கட்டை கித்துல் உதுவ பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று (03) மாலை மீட்கப்பட்டுள்ளது.
காலி – ஹபராதுவ பிரதேசத்திலிருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பத்தாம் கட்டை பகுதிக்கு வந்து வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த குறித்த நபர் திங்கட்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பந்துல சிறி பத்திரன (67) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.




