மேலும் 4 விலங்குகளிற்கு கொரோனா தொற்று!

Date:

தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் இரண்டு சிம்பன்சிகள் மற்றும் இரண்டு ஒராங்குட்டான்கள் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசானநாயக்க தெரிவித்தார்.

விலங்குகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முன்னதாக, 2013 ஆம் ஆண்டில் சியோலில் ஒரு மிருகக்காட்சிசாலையில் இருந்து பரிசாக வழங்கப்பட்ட பதினொரு வயது சிங்கம் ‘தோர்’, கோவிட் தொற்றிற்குள்ளானது. இலங்கையில் ஒரு விலங்கு தொற்றிற்குள்ளான முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

பின்னர், 12 வயதான சிங்கம் ‘ஷீனா’ தொற்றிற்குள்ளானது. தற்போது இரண்டும் குணமடைந்து விட்டன.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய சுகாதார வழிகாட்டுதல்களின்படி 25% பார்வையாளர்கள் எந்த நேரத்திலும் விலங்கியல் பூங்காக்களை பார்வையிட முடியும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 675 ஆக உயர்வு

இந்த வாரம் சீனாவுடனான எல்லைக்கு அருகே ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் நேபாளத்தில்...

யுவதியை கடத்திச் சென்ற கார் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு

யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ்...

காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டிற்கு சமத்துவக் கட்சி முழுமையான ஆதரவு! – மு. சந்திரகுமார்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு சமத்துவக் கட்சி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்