குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயின் அதிர்ச்சி வீடியோ: கணவனிற்கு அனுப்ப பதிவு செய்தாராம்: யாழில் இளம் தாய் கைது!

Date:

தனது பச்சிளங்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம், மணியந்தோட்ட பகுதியை சேர்ந்த 23 வயதான தாயொருவரே கைது செய்யப்பட்டார்.

நேற்று (1) இரவு தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய இளம் தாயொருவரின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தடியொன்றினால் 7 மாத குழந்தையை அந்த பெண் கொடூரமாக தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியிருந்தது.

இன்று காலையில் இது தொடர்பில் நடவடிக்கையெடுத்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், குழந்தையை தமது பொறுப்பில் எடுத்தனர். அத்துடன் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் திருகோணமலையை சேர்ந்தவர் என்றும், தற்போது அரியாலையில் வாடகைக்கு குடியிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. அத்துடன், குவைத்தில் குழந்தை பிரசவித்து நாடு திரும்பியதாகவும், கணவர் பணம் அனுப்பாததால், அவருக்கு அனுப்ப குழந்தையை அடிக்கும் வீடியோவை பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்