சாய்ந்தமருதில் “யாவருக்கும் மின்சாரம்” இலவச மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு!

Date:

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சௌபாக்கியா வேலைத் திட்டத்தின் கீழ் ” யாவருக்கும் மின்சாரம் ” திட்டத்தினால் இலவச மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்றது.

சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் , கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் ஏ.எம்.ஹைகல், சமுர்த்தி முகாமையாளர்களான யூ.எல். ஏ. ஜூனைதா, எஸ்.றிபாயா, ஏ.எம்.ஏ. கபூர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபர் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் சமூர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் 163 குடும்பங்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 38 லட்சம் நிதியில் இலவச மின்சாரம் வழங்கி வைக்கப்பட்டன

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்