பசில் பதவியேற்றதில் வவுனியா வாசிகள் சிலருக்கு வந்தது மகிழ்ச்சி!

Date:

பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ததையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்

பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவியேற்றதையடுத்து பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களால் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (08.07) வெடிகொழுத்தி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பசில் ராஜபக்ஸ் இலங்கையின் புதிய நிதியமைச்சராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று (08) காலை பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.

இதனையடுத்து, பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட ஆதரவாளர்களினால் பசில் ராஜபக்ஸ அவர்களை வரவேற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், வெடி கொழுத்தி மகிழ்ந்ததுடன், அங்கு நின்றவர்கள், வீதியால் சென்றவர்களுக்கு இனிப்புக்களும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குறித்த நிகழ்வில் வவுனியா நகரசபையின் உப தவிசாளர் சு.குமாரசாமி, பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் ஆதரவாளர்கள், பொதுஜன ரெமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...

BYD கார் காட்சியறை திறப்பு மட்டக்களப்பு

ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் BYD கார் விற்பனை நிலையத்தின்...

காரைதீவில் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் “மக்கள் உணவகம்” திறப்பு

காரைதீவு கல்முனை பிரதான வீதியில், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு எதிரில், "1967...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்