யாழில் கற்ற வித்தையையெல்லாம் மொத்தமாக இறக்கிய மணல் கடத்தல்காரர்கள்: 4 அதிரடிப்படையினர் காயம்!

Date:

யாழ்ப்பாணம் அரியாலையில் சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 4 அதிரடிப்படையினர் சிறு காயங்களிற்குள்ளாகினர். மணல் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் அரியாலை கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்றை அதிரடிப்படையினர் சுற்றிவளைத்த போது, உழவு இயந்திரத்துடன் மணல் கடத்தல்காரர்கள் தப்பிச் செல்ல முயன்றனர்.

உழவு இயந்திரத்தை வெட்டி வெட்டி ஓடி தப்பிச் செல்ல முயன்றனர்.

உழவு இயந்திரத்தை மடக்கிப் பிடிக்க முயன்ற 4 அதிரடிப்படை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறு காயம் அடைந்து யாழ் வைத்திய சாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் உழவு இயந்திரமும், அதில் பயணித்த இரண்டு கடத்தல்காரர்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்