யாழில் கற்ற வித்தையையெல்லாம் மொத்தமாக இறக்கிய மணல் கடத்தல்காரர்கள்: 4 அதிரடிப்படையினர் காயம்!

Date:

யாழ்ப்பாணம் அரியாலையில் சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 4 அதிரடிப்படையினர் சிறு காயங்களிற்குள்ளாகினர். மணல் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் அரியாலை கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்றை அதிரடிப்படையினர் சுற்றிவளைத்த போது, உழவு இயந்திரத்துடன் மணல் கடத்தல்காரர்கள் தப்பிச் செல்ல முயன்றனர்.

உழவு இயந்திரத்தை வெட்டி வெட்டி ஓடி தப்பிச் செல்ல முயன்றனர்.

உழவு இயந்திரத்தை மடக்கிப் பிடிக்க முயன்ற 4 அதிரடிப்படை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறு காயம் அடைந்து யாழ் வைத்திய சாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் உழவு இயந்திரமும், அதில் பயணித்த இரண்டு கடத்தல்காரர்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

துறைமுகநகரில் கடத்தப்பட்ட சீனப்பிரஜையின் சடலம் மீட்பு!

துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும்...

டெங்கு பரிசோதனையில் சிக்கிய துப்பாக்கி

பத்தரமுல்லவின் பெலவத்த பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றின்போது, ​​இரண்டு மாடி...

முன்னாள் அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல்

காவல்துறை உத்தியோகத்தர் போல் நடித்து, ஒரு சீன நாட்டவரின் வாகனம் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்