UPDATE: தந்தையை கொலை செய்த மகன் கைது!

Date:

தந்தையை தாக்கி கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கிராம மக்களின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், நிலாவரை புத்தூர்- இராசபாதை வீதியில் நேற்று (28) இரவு இந்த கொலை சம்பவம் நடந்தது.

சீனிவாசம் (64) என்பவரே கொல்லப்பட்டார்.

அவரது 33 வயதான மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இன்று காலையில் சம்பவத்தை அறிந்த அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

பொலிசார் வருவதை அறிந்த மகன் வீட்டிலிருந்து தப்பியோடி விட்டார்.

பின்னர் கிராமமக்கள் அவரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்