அவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதிகளாக பணியாற்றும் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள்!

Date:

இலங்கை தேசிய அணியில் விளையாடிய இரண்டு வீரர்கள் தற்போது அவுஸ்திரேலியாவில் பேருந்த சாரதிகளாக பணிபுரிகிறார்கள்.

ஒரு காலத்தில் இலங்கை அணியில் நம்பிக்கைக்குரிய எதிர்கால வீரராக கருதப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் சுராஜ் ரந்தீவ் மற்றும் துடுப்பாட்ட வீரர் சிந்தக்க ஜயசிங்க ஆகியோரே தற்போது பேருந்த சாரதிகளாக பணிபுரிகிறார்கள்.

2009 ஆம் ஆண்டில் இலங்கைக்காக சர்வதேச அறிமுகத்தை பெற்ற சூரஜ் ரந்தீவ்,
12 டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 7 ரி 20 போட்டிகளில் விளையாடினார். இலங்கை அணி 2011 கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆடிய போது, ரந்தீவும் அந்த அணியில் விளையாடினார்.

ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஆடினார்.

சிந்தக்க ஜயசிங்க 5 ரி 20 போட்டிகளிலும் ஆடினார்.

சுராஜ் ரந்தீவ் அண்மையில் அவுஸ்திரேலிய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்து வீச்சாளராகவும் பணியாற்றினார். தற்போது, அவுஸ்திரேலியாவில் பகுதி நேர பேருந்து சாரதியாக அவரும், சிந்தக்கவும் பணியாற்றி வருகிறார்கள்.

அவுஸ்திரேலிய பிக்பாஷ் தொடரில் விளையாடுவதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும்...

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்