இணையத்தள முன்பதிவு மூலம் நுகர்வோர் மது வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான திட்டம் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இணையத்தளம் வழியாக மதுபானம் வாங்குவதற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், தொடர்புடைய பரிந்துரைகள் மற்றும் அவதானிப்புகள் நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒப்புதல் வழங்கப்பட்டால், நிபந்தனை அடிப்படையில் திட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.




