ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் சிறிய ரக விமானங்கள் மோதி விபத்து: 5 பேர் பலி!

Date:

சுவிட்சர்லாந்து மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதியதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் கடந்த சனிக்கிழமை பயணித்தன. ஒரு விமானத்தில் விமானி மட்டும் பயணித்தார். மற்றொரு விமானத்தில் குழந்தை உள்பட 4 பேர் பயணித்துள்ளனர். ஆல்ப்ஸ் மலைத்தொடரின் கிழக்கே ஹுபர்டன் என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது இரண்டு விமானங்களும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இருப்பினும், 4 பேர் பயணித்த சிறிய ரக விமானம் மாயமானதாக தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அந்த சிறிய ரக விமானத்தை தேடும் பணியில் மட்டும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்கு பின்னர் 4 பேர் பயணித்த சிறிய ரக விமானம் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஹுபர்டன் பகுதியில் விபத்துக்குள்ளானதை மீட்புகுழுவினர் கண்டுபிடித்தனர்.

இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர். விபத்து நடைபெற்ற பகுதிக்கு அருகே மற்றொரு சிறிய ரக விமானத்தையும் மீட்புக்குழுவினர் கண்டுபிடித்தனர். அந்த விமானத்தில் விமானி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து 5 பேரின் உடல்களையும் மீட்ட மீட்புக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு விமானங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்