எரிவாயு சிலிண்டருக்குள் மறைத்து வந்த ஹெரோயினின் பெறுமதி 1.758 பில்லியன் ரூபா!

Date:

வெலிகம, பொல்வதுமோதர கடலில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மதிப்பு ரூ .1.758 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

219 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடல் வழியாக நாட்டிற்கு கடத்த முயன்ற 9 சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.

பல நாள் மீன்பிடி படகு வழியாக இலங்கை நீர்ப்பரப்பிற்குள் ஹெரோயின் கொண்டு வரப்பட்டது. பின்னர் அதை டிங்கிப் படகில் வெலிகம கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 219 கிலோ மற்றும் 800 கிராம் ஹெரோயின் பல நாள் மீன்பிடி இழுவைப்படகு மற்றும் ஒரு டிங்கிப் படகு ஆகியவற்றைக் கடற்படை கைப்பற்றியது.

இந்த இழுவை படகு மே 11 ஆம் திகதி மாத்தறை, கொட்டெகொட மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டு சர்வதேச கடலில் வெளிநாட்டு கடத்தல்காரர்கள் வழியாக ஹெரோயினை பெற்றது என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர்கள், 26 முதல் 43 வயதுக்குட்பட்டவர்கள், வெலிகம, அஹங்கம, திக்வெல்ல, கொட்டெகொட, இஹலவத்தை, மிரிச, பொல்வதுமோதர மற்றும் பிலியந்தல வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரருடன் நடிகைக்கு தொடர்பா?: தீவிர விசாரணை!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி...

மோகினியில் கவிழ்ந்த கிளி, வவுனியா வாசிகள்!

விடுமுறை அல்லாத காலத்தில் சிவனொளிபாதமலையில் தரிசனம் செய்ய வந்திருந்த ஒரு குழுவினரை...

நீண்டகாலத்தின் பின் ஒரே நிகழ்வில் கலந்து கொண்ட திலீப்- மஞ்சு வாரியார்

திலீப் மற்றும் மஞ்சு வாரியர் மலையாளிகளின் விருப்பமான நடிகர்கள். ஒரு காலத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்