23 கரட் தங்கத்தில் உலகின் விலை உயர்ந்த பிரியாணி… விலையை கேட்டால் தலைசுற்றும்!

Date:

டுபாயிலுள்ள ஹொட்டல் ஒன்றில் 23 கரட் தங்கத்துடன் உலகின் மிகவும் விலை உயர்ந்த பிரியாணி பரிமாறப்படுகிறது. இதன் விலை இலங்கை மதிப்பில் 52,000 ரூபாயாகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரில் உள்ள Bombay Borough ஹொட்டலில்த்தான் அந்த விலை உயர்ந்த பிரியாணி பரிமாரப்படுகிறது. த ரோயல் கோல்ட் பிரியாணி என்று கூறப்படும் அந்த பிரியாணியில் 23 கரட் உட்கொள்ளக் கூடிய தங்கம் வைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பிரியாணி அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இதன் விலை அமீரகத்தின் கரன்சியில் 1000 திராம்கள். இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.52,800.00 ஆகும். பிரியாணியில் பரிமாறப்படும் 23 கரட் தங்கமானது இலை வடிவில் மிகவும் மெல்லியதாக மாற்றப்பட்டு உணவுக்கு மேலே அலங்காரமாக வைக்கப்படுகிறது.

பிரியாணியின் மேலே சாப்பிடக்கூடிய வகையிலான 23 கரட் தங்க இலை, சிக்கன் கபாப், குங்குமப்பூ போட்டு சமைக்கப்பட்ட சாதம், காஷ்மீரின் செம்மறி ஆட்டுக்கறி கபாப், டெல்லியின் புகழ் பெற்ற செம்மறி ஆட்டு சாப்ஸ், ரஜபுத்திரர்களின் சிக்கன் கபாப், முகலாயர்கள் ஸ்டைல் கோப்தா, மலாய் சிக்கன் ரோஸ்ட் போன்றவை இந்த இந்த ரோயல் கோல்ட் பிரியாணி தட்டில் இடம் பெற்றுள்ளன.

இந்த பாம்பே பாரோ ஹொட்டலானது டுபாய் இன்டர்நஷனல் பைனான்சியல் சென்டரில் அமைந்துள்ளது. இந்த ரோயல் பிரியாணியை ருசிக்க ஏகப்பட்ட நபர்கள் ஹொட்டலுக்கு வரத் தொடங்கியுள்ளனராம்.

https://www.instagram.com/p/CLa9j3uJ4Hb/

spot_imgspot_img

More like this
Related

யாழில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற முயன்ற இளைஞன் பலி

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, பாரதி...

7,419 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தியடையவில்லை!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சையில் பங்கேற்ற மொத்தம்...

ஐஸ் சர்ச்சை: தெரணியகலவில் நடந்தது என்ன?

அவிசவெல்ல பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட குழு ஒன்று, நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்