கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று சனிக்கிழமை 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடி சுபாஸ் வெதுப்பகத்துடன் தொடர்புபட்டவர்களுக்கும் மற்றும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களுக்குமே தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த 23ம் திகதி எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளே இன்று வெளியாகியுள்ளன.
கரணவாய் பொதுச் சுகாதார பிரிவில் 14 பேருக்கும், உடுப்பிட்டி பொதுச் சுகாதார பிரிவில் 8 பேருக்கும், நெல்லியடி பொதுச் சுகாதார பிரிவில் 7 பேருக்கும், துன்னாலை பொதுச் சுகாதார பிரிவில் 7 பேருக்கும், அல்வாய் பொதுச் சுகாதார பிரிவில் 4 பேருக்கும் என 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1