மருத்துவர்கள்,மருத்துவ ஊழியர்கள் குறித்து அரசுக்கு அக்கறை இல்லை;உயர் நீதிமன்றம் காட்டம்!

Date:

கொரோனாவால் மருத்துவர்களே உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில், மருத்துவர்களை பாதுகாப்பதில் மகாராஷ்டிர அரசு அக்கறை காட்டுவதில்லை என
மும்பை உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும், மருத்துவர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் தகவல் வழங்கும்படி மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மாநில அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து நடைபெற்ற விசாரணையின்போது, “ஒரு பக்க பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு வழக்கறிஞரால் சரிபார்க்கப்படாத பிரமாண பத்திரங்கள் இனி ஏற்கப்படாது.

இது மிகவும் மோசமான நடவடிக்கை. மருத்துவர்களை பாதுகாக்க அரசு தீவிர அக்கறை காட்டவில்லை என தெரிகிறது. ஆனால், மருத்துவர்கள் முழு உழைப்பையும் வழங்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்” என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அடுத்த வாரத்துக்குள் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி மாநில சுகாதாரத் துறை துணைச் செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்