ரேஷன் கடையில் கொரோனா நிதி ரூ.7.36 லட்சம் கொள்ளை!

Date:

சென்னை சைதாப்பேட்டை காவேரி நகர் ரேஷன் கடையில் ரூ.7.36 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கொரோனா நிவிரண நிதியாக முதல் தவணை நிதியாக ரூ.2 ஆயிரம் தமிழக அரசால் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் படி கடந்த 15ஆம் தேதியில் இருந்து பொதுமக்களுக்கு நிதி வழங்கப்பட்டு வரகிறது. இதற்காக அந்தந்த ரேஷன் கடைகளில் இருந்து தினமும் 100 பேருக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை காவேரி நகர் ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.7.36 லட்சம் பணம் கொள்ளை போனதாக ரேஷன்கடை மேற்பார்வையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே தமிழக அரசு நிதி சுமையில் உள்ள நிலையில், மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை கொள்ளை போனது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்