பிரதேசத்தின் வளங்களை அழிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை: பச்சிலைப்பள்ளி தவிசாளர்

Date:

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்துக்கு சொந்தமான வளங்களை யாரவது அழித்தால் அல்லது சிதைத்தல் அல்லது உருமாற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் உள்ளூராட்சி மன்றதிற்கு சொந்தமான வீதிகளில் சபையின் அனுமதி இன்றி வளப்பரிமாற்றம் செய்தால் உள்ளூராட்சி சட்டத்தின் அடிப்படையில் வழக்குத்தாக்கல் செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் கச்சார்வெளி, செல்வபுரம் பகுதியில் மக்களின் அன்றாட பிரச்சனைள் மற்றும் 2021 ம் ஆண்டுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக இன்று கச்சார்வெளி பொதுநோக்கு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

இங்கு கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் குறிப்பிடுகையில் பிரதேச வளங்களை பாதுகாக்கும் மிக பெரிய பொறுப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களிடம் உள்ளது ஆனாலும் உங்களுடைய ஒத்துழைப்புக்கள் இன்றி நாம் எதுவும் செய்துவிட முடியாது அத்துடன் மக்களும் இயற்க்கை வழங்கள் பற்றி அக்கறை கொண்டு அதை பாதுகாத்து எமது எதிர்கால சந்ததிக்கு கையளிக்கவேண்டும் என்றார்.

இக் கலந்துரையாடலில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உபதவிசாளர் கஜன் உறுப்பினர்கள் ரமேஷ், வீரவாகுதேவர் கிராமத்தின் அமைப்புக்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

புதுச்சேரி உள்விவகாரங்களில் தலையிட்டாரா இலங்கைத் தூதரக அதிகாரி?

புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதித்...

யாழில் சைவசித்தாந்த பட்டப்படிப்புகளை ஆரம்பிக்கும் தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம்

சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்தப்புலவர், பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா யாழ் மண்ணில் ஆரம்பித்து...

கொத்துப் போட பிந்தியதால் உணவக ஊழியர் மீது தாக்குதல்!

மட்டக்களப்பு அரசடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள இரவு உணவகம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்