திருமுறுகண்டி பகுதியில் 350 கட்டில்களுடன் புதிய கொரோனா சிகிச்சை நிலையம்

Date:

கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ் உள்ள திருமுறுகண்டி பகுதியில்
350 கட்டில்களுடன் புதிதாக கொரோனா சிகிச்சை நிலையம் இன்று (14)
முதல் தயார்ப்படுத்தப்படடுள்ளது.

ஏற்கனவே வட மாகாணத்திற்கான தொற்று நோய் மருத்துவமனையான கிருஸ்ணபுரம்
வைத்தியசாலை செயற்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு மேலதிகமாக
மலையாளபுரம் கிராமத்தில் இதுவரை காலமும் இராணுவ வைத்தியசாலையாக இருந்து
வந்த நிலையம் தற்போது கொரோனா சிகிச்சை நிலையமாக 07.05.2021 அன்று
தொடக்கம் மாற்றப்பட்டுள்ளது.

தற்போது கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ் உள்ள திருமுறுகண்டி
பகுதி இராணுவ முகாம் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக இன்றிலிருந்து
மாற்றப்படுகிறது. குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தை இன்று 14.05.2021
கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல்
ஹரேந்திர ரணசிங்க, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் தெரிவிக்கையில் கிளிநொச்சி
மாவட்டத்தில் 06 கொரோனா சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என
தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்