வவுனியா, கிளிநொச்சி வீதியோரங்களில் வீசப்பட்டிருந்த காசோலைகள்!

Date:

ஏ9 வீதியில் வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் பல வங்கிகளின் காசோலைகள் வீதியோரங்களில் இன்று காலை வீசப்பட்டுள்ளது.

வவுனியாவில் வீசப்பட்டவை 2014 ஆம் ஆண்டுக்குரிய பல வங்கிகளுக்குரியதாக காணப்பட்டதுடன் அவை அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குரியதாகவும் காணப்பட்டது.

அதிகளவான காசோலைகள் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்ததாக காணப்பட்டன.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டு சந்தி மற்றும், கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுவரித்திணைக்கள அலுவலகத்தை அண்மித்த பகுதியிலும் இவ்வாறு காசோலைகள் வீசப்பட்டுள்ளன.

வீசப்பட்டுள்ள காசோலைகள் அரச மற்றம் தனியார் வங்கிகளினுடையது என்பதுடன், அவை பயன்படுத்தப்பட்டும் உள்ளன. ஏ9 வீதியில் இவ்வாறு காசோலைகள் வீசப்பட்டுள்ளமையானது கேள்விகளை எழுப்பியுள்ளது. பயன்படுத்தப்பட்ட காசோலைகள் எனினும் அது என்ன நோக்கத்திற்காக வீசப்பட்டுள்ளன என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சுமார் நூற்றுக்கு மேற்பட்ட காசோலைகள் இவ்வாறு வீதியில் வீசப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிசாரு்ம, பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்