திருமுறுகண்டி பகுதியில் 350 கட்டில்களுடன் புதிய கொரோனா சிகிச்சை நிலையம்

Date:

கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ் உள்ள திருமுறுகண்டி பகுதியில்
350 கட்டில்களுடன் புதிதாக கொரோனா சிகிச்சை நிலையம் இன்று (14)
முதல் தயார்ப்படுத்தப்படடுள்ளது.

ஏற்கனவே வட மாகாணத்திற்கான தொற்று நோய் மருத்துவமனையான கிருஸ்ணபுரம்
வைத்தியசாலை செயற்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு மேலதிகமாக
மலையாளபுரம் கிராமத்தில் இதுவரை காலமும் இராணுவ வைத்தியசாலையாக இருந்து
வந்த நிலையம் தற்போது கொரோனா சிகிச்சை நிலையமாக 07.05.2021 அன்று
தொடக்கம் மாற்றப்பட்டுள்ளது.

தற்போது கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ் உள்ள திருமுறுகண்டி
பகுதி இராணுவ முகாம் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக இன்றிலிருந்து
மாற்றப்படுகிறது. குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தை இன்று 14.05.2021
கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல்
ஹரேந்திர ரணசிங்க, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் தெரிவிக்கையில் கிளிநொச்சி
மாவட்டத்தில் 06 கொரோனா சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என
தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்