வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

Date:

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
.
அந்தப் பகுதியில் நபர் ஒருவர் சடலமாக கிடப்பது தொடர்பாக இன்று மதியமே வவுனியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும், தகவல் வழங்கி நீண்ட நேரமாகியும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அந்தப் பகுதியில் நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த ஒரு முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலம் அங்கிருந்து அகற்றப்பட்டு, மேலதிக பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு

தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பெருமளவு போதைப்பொருட்களை...

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...

விவசாயி சின்னத்தை நாதக பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ஜனதா கட்சியின் ‘ஏர் உழவன்’ சின்னத்தைப் போல இருக்கும் விவசாயி சின்னத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்