வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
.
அந்தப் பகுதியில் நபர் ஒருவர் சடலமாக கிடப்பது தொடர்பாக இன்று மதியமே வவுனியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும், தகவல் வழங்கி நீண்ட நேரமாகியும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அந்தப் பகுதியில் நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த ஒரு முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் அங்கிருந்து அகற்றப்பட்டு, மேலதிக பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.



