சிறைச்சாலை கைதிகளை விடுமுறையில் வீடுகளிற்கு அனுப்பும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறையில் செல்லும் கைதிகளினால் வீடுகளில் தொற்று பரவாமலிருக்கவும், விடுமுறையின் பின்னர் திரும்புபவர்களால் சிறைக்குள் பரவாமலிருக்கவும் இந்த நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீண்டகால தண்டனை அனுபவிக்கும் கைதிகளிற்கு நன்னடத்தை அடிப்படையில் விடுமுறை வழங்கப்படும்.
நன்னடத்தை தகுதியுள்ள கைதிகள் தங்களது தண்டனையின் முதல் இரண்டு ஆண்டுகளை முடித்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவர்களுக்கு ஒரு வாரம் விடுப்பு வழங்கப்பட வேண்டும், பின்னர் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் 10-14 நாள் விடுப்பு வழங்கப்படும்.
தற்போதைய தொற்று நிலைமை குறைந்ததும் இந்த செயல்முறை மீண்டும் தொடங்கும் என்று சிறைச்சாலைத் துறை கூறியது.




