ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

Date:

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்முனை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர் அன்சார் முஹம்மட் சினான் பெற்றுக்கொண்டுள்ளார்.

சாரணர் இயக்கத்தில் சிறப்பான ஈடுபாடு, தலைமைத்துவத் திறன், சமூக சேவை மற்றும் பல்வேறு செயற்பாடுகளில் தொடர்ச்சியான பங்களிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அன்சார் முஹம்மட் சினான், USF ஸ்ரீலங்கா அமைப்பின் செயற்பாட்டாளராகவும், YMMA சாய்ந்தமருது கிளையின் இளைஞர் விருது மற்றும் பயிற்சிப் பிரிவுத் தலைவராகவும் சமூக மற்றும் இளைஞர் மேம்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

சாய்ந்தமருதிற்கு பெருமை சேர்த்துள்ள இளம் சாரணரின் இச்சாதனைக்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்