யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு தமக்கு தாமே தீமூட்டி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று (2) அதிகாலையில் அவர்கள் உயிரிழந்தனர்.
பாடசாலை தவணை பரீட்சையில் குறைவான மதிப்பெண்களை பெற்றதாகவும், மேலதிக வகுப்புக்களுக்கு செல்ல குடும்ப வறுமை இடமளிக்கவில்லையென்றும் உயிரிழப்புக்கு முன்னர் அவர்கள் தெரிவித்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.




