ரூ.1.43 கோடி ஊழல் குற்றச்சாட்டு: உப்பு நிறுவன GM கைது

Date:

இலங்கை உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது மேலாளர் ரண்நாயக்க முதலியன்சேலாகே பிரசன்ன (Rannayaka Mudiyanselage Prassanna) என்பவர், பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டுகளின்படி, நிறுவனத்திற்கான பைகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை முறையான கொள்வனவு நடைமுறைகளை பின்பற்றாமல் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த முறைகேடான பரிவர்த்தனையால் அரசுக்கு சுமார் ரூ.1 கோடியே 43 இலட்சம் (ரூ.14.3 மில்லியன்) நிதி இழப்பு ஏற்பட்டதுடன், பொருட்களை வழங்கிய நிறுவனத்திற்கு சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற சலுகை கிடைத்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்