சுரேஷ் சாலே தொடர்ந்து தடுப்புக்காவலில்

Date:

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சாலே மீது பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமர இன்று உத்தரவிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான தொடர் விசாரணைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சுரேஷ் சாலேயை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

சந்தேக நபருக்காக ஆஜரான சட்டத்தரணி அசித் சிறிவர்தன, மூன்றாவது சந்தேக நபரான சுரேஷ் சாலே, இச்சம்பவம் தொடர்பாக நீதவான் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த நீதவான், நீதிமன்ற நடைமுறையின்படி, வாக்குமூலம் அளிக்க அனுமதி கோரும் சந்தேக நபருக்கு, அதுகுறித்த விடயத்தைப் பரிசீலிப்பதற்காக நியாயமான கால அவகாசம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

அதன்படி, மூன்றாவது சந்தேக நபர் அத்தகைய வாக்குமூலத்தை அளிக்க உத்தேசித்துள்ளாரா என்பதைத் தீர்மானிக்க நீதவான் அவருக்கு ஓர் மாத கால அவகாசம் வழங்கினார்.

சந்தேக நபரின் முடிவு குறித்து மே 20 அன்று நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், அவர் பகிரங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்