ஓட்டமாவடி பிரதேசசபை ஐ.ம.ச வசம்

Date:

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர் முகமட் மீராசாவு முகமட் ஹலால்டீன் தெரிவு செய்யப்பட்டார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் A.L.M அஸ்மி தலைமையில் இன்று (20). நடைபெற்றது.

முன்னதாகத் தவிசாளராகப் பதவி புரிந்த முகமட் கனீபா முகமட் பைருஸ் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து முஸ்ஸிம் காங்கிரஸ் கட்சி மாறி தவிசாளர் பதவியை பெற்று இருந்த நிலையில் கட்சியின் தீர்மானத்தை மீறியதின் காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்தின் காரணமாக தனது தவிசாளர் பதவியை அண்மையில் இழந்து இருந்தார். அதன் வெற்றிடத்தை நிரப்புவதற்கே, புதிய தவிசாளர் தெரிவு நடைபெற்றது.

19 உறுப்பினர்களைக் கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபையின் அமர்வில், 11 உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துகொண்டு, புதிய தவிசாளரைத் தெரிவுசெய்தனர்.

ஐக்கி மக்கள் சக்தி 8 உறுப்பினர்களும் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சைக் குழு ஆகிய கட்சிகளின் தலா ஒவ்வோர் உறுப்பினர்களும் கலந்துகொண்டு புதிய தவிசாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 06 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 2 உறுப்பினர்களும் , சபைக்கு சமூகமளிக்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

-மு.கோகிலதாசன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்