முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டதற்காக கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் வைத்தியர் ருக்ஷன் பெல்லனா மீது ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சுகாதார துணை அமைச்சரின் கூற்றுப்படி, முறையான அங்கீகாரம் இல்லாமல் நோயாளிகளின் முக்கியமான மருத்துவத் தகவல்களை வெளியிட அதிகாரிகள் அனுமதிக்கப்படவில்லை, என்றும் குறிப்பாக உயர் பதவியில் உள்ள நபர்களின் விடயத்தில் இவ்வாறு பகிரங்க அறிவிப்பு வெளியிடல் தவறு என்றும் கூறப்பட்டுள்ளது.




