காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு 11 ஜூன் பிற்பகல் 1.15 மணி முதல் 1.20 மணி வரை கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதில், வடமாகாணத்தில் உள்ள சுமார் 10 காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இத் தொலைபேசி மிரட்டலின் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், வடமாகாணத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




