வகுப்பறை மீது மரக்கிளை முறிந்து விழுந்து மாணவன் பலி

Date:

பலாங்கொடை, ராஜவாக்க மகா வித்தியாலயத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது  மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில் ஒரு மாணவர் உயிரிழந்தார், மேலும் 17 பேர் காயமடைந்தனர் என்று பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் பலாங்கொடை, ராஜவாக்க மகா வித்தியாலயத்தில் 13 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவன் டபிள்யூ.ஏ. கிவிர ஹிருஜ என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மற்றொரு மாணவரின் நிலை மோசமாக உள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையில், பாடசாலைக்குச் சென்ற 57 வயது தாயும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரத்தின் கிளை விழுந்த கட்டிடத்தில் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகள்  நடந்தது என்றும், 17 மாணவர்கள் விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் 6 மாணவிகளும் 11 மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாடசாலை முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பாடசாலை கட்டிடமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்