கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் நீர் வடிகால் வாய்க்காலில் நேற்று (மே.24) இரவு மோட்டார் சைக்கிளுடன் விழுந்து 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி 190 இலக்கத்தில் வசிக்கும் சோமு கஜேந்திரமூர்த்தி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், கிளிநொச்சி மாவட்ட பரந்தன் விவசாய திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றினார்.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் சிவபால சுப்பிரமணியம் நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்து மரண விசாரணைக்காக சடலத்தை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பணித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் பல கோணங்களில்
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



