லிபியாவில் படகு விபத்து: 16 பேர் உயிரிழப்பு, 10 பேர் மாயம்

Date:

லிபியாவின் கடற்கரையில் 64 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காணாமல் போயுள்ளனர். மீதமுள்ள 37 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட விசாரணையில், இந்த பயணிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பலர் கடல் மார்க்கமாக புறப்பட்டு, லிபியாவிலிருந்து இத்தாலிக்கு செல்ல முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிபியாவின் தலைநகரமான ட்ரிபோலியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், இந்த விபத்துக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழந்த 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அவர்களின் கடவுச்சீட்டுகளை வைத்து அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதும் சரிபார்க்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேயின் மனைவியின் நாடகங்கள் தொடர்கின்றன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவைத்...

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்