பரவவிலவில் பயங்கர விபத்து – பலர் காயம்

Date:

இன்று (12) காலை, கிரியுல்ல – மினுவாங்கொட வீதியில், பரவவில பகுதியில் மிகப்பெரிய விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் ஒன்று, எதிரே வந்த வேனை நேரடியாக மோதியதால், கோரத்தமான விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தின் விளைவால், காரும் வேனும் மோசமாக சேதமடைந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், சாரதியின் கவனக்குறைவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பரவவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்