ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் கொண்ட கடிதம் எழுதிய விஜய் சேதுபதி, வெற்றிமாறன்!

Date:

தமிழக முதல்வராக பதவியேற்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், 14 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்டோர் எழுதியிருக்கிறார்கள்.

ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டது. அதில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

இந்நிலையில் பலரும் ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வருகிறார்கள். மேலும் சமூக வலைதளங்களிலும் வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.

திரையுலகை சேர்ந்தவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், முடங்கிப் போயிருக்கும் சினிமா துறைக்கு உதவி செய்யுமாறு கோரிக்கையும் விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் உள்பட 67 பேர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் 14 கோரிக்கைகள் கொண்ட கடிதம் ஒன்றையும் அளித்துள்ளனர். அந்த கடிதத்தில் ஸ்டெர்லைட், கூடங்குளம், எட்டு வழிச்சாலை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக ஸ்டாலினை சந்தித்தது குறித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்ததாவது,

தமிழ் நாட்டின் அடுத்த முதல்வராக பதவி ஏற்க இருக்கும் தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நானும் எனது மனைவி, தயாரிப்பாளர் கமீலா நாசரும் சந்தித்து வாழ்த்து கூறினோம். அப்போது, தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தற்போது உள்ள சூழலையும், அதனால் பென்ஷன் பெற முடியாமல் இந்த கொரோனா காலத்தில் மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் கலைஞர்களின் நிலைமையையும் எடுத்துக் கூறினேன். கண்டிப்பாக ஆவண செய்கிறேன் என்று கூறினார். அதற்கு அவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், முதல்வராக பதவியேற்க இருக்கும் அவருக்கு, அனைத்து நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை!

தொடர்ச்சியாக 13 நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல்...

ரோஹன விஜேவீர குடும்பத்திற்காக ரூ.26 மில்லியன் செலவு

மறைந்த ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) நிறுவனர் ரோஹன விஜேவீரவின் குடும்பத்தைப்...

ஜனாதிபதி சட்டத்தரணி தகுதிக்கு 20 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்!

ஜனாதிபதி சட்டத்தரணிகள் (PC) நியமனம் குறித்த திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்