24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

இன்றைய தினம் (15.01.2025) காலை 11.00 மணியளவில் தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த காரியாலயத்தை கௌரவ கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வை கட்சியின் பிரதேச இணைப்பாளர் மாடசாமி செல்வராசா அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களின் சமாச தலைவர், பிரதேச கடற்றொழில் சங்க உறுப்பினர்கள், மருதங்கேணி இலங்கை வங்கி முகாமையாளர், மற்றும் கட்சியின் பிரதேச ஆதரவாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த நிர்வாக காரியாலயம், பிரதேச மக்களின் தேவைகளுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய மையமாக செயல்படவுள்ளது என வலியுறுத்தப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கம்மன்பிலவின் கவலைகளின் பின்னணி என்ன?

Pagetamil

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

Leave a Comment