ஐக்கிய மக்கள் சக்தி – ஐக்கிய தேசியக் கட்சி இணை நடவடிக்கைக்கு திட்டம்

Date:

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஒன்றிணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (06) கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துரைத்த போது, மக்களின் எதிர்பார்ப்பு குறித்து அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து செயல்பட வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும், இதற்கான கலந்துரையாடல்களை திட்டமிட்டு, பொருத்தமான முறையில் முன்னெடுக்க போகிறோம். எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவிதமான நேரடி பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை எனவும், தொடங்கப்படாத நிலை நீடிக்கிறது எனவும் ரஞ்சித் மத்தும பண்டார தெளிவுபடுத்தினார்.

தற்போது SJB மற்றும் UNP இடையிலான இணைப்பை ஆதரிக்கும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதற்கான இந்த முயற்சிகள், இலங்கையின் அரசியல் சூழ்நிலையில் புதிய பரிமாணத்திற்கான வழிவகையாக அமையலாம் என எண்ண இடமளிக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்