திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அசத்தல் சாதனை

Date:

திருச்சியில் 75 வயது முதியவரின் உயிரை காப்பாற்றி, மருத்துவர்கள் அசத்தல் சாதனை புரிந்துள்ளனர். திருநெடுங்குளம் பகுதியில் வசிக்கும் முதியவர் கடுமையான வயிற்றுவலியால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட பரிசோதனையில், அவரது கல்லீரலின் மேற்பகுதியில் 1.5 கிலோ எடையுள்ள பெரிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

இதயம் மற்றும் நுரையீரல் நிபுணர்களின் ஒத்துழைப்புடன், நவீன லேப்ராஸ்கோப்பி முறை மூலம் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இவ் அறுவை சிகிச்சையை முதல்வர் குமரவேல் தலைமையில், அனுபவம் வாய்ந்த மருத்துவர்களான டாக்டர் கண்ணன், சங்கர், ராஜசேகரன், கார்த்திகேயன், இளங்கோ, மற்றும் இளவரசன் மேற்கொண்டனர்.

மனித உடலில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான ஹார்மோன்களை உருவாக்கல், இரத்த உறைவதற்கு உதவுதல், உடல் கழிவுகளை வெளியேற்றல் போன்ற செயல்பாடுகளுக்கு இது அவசியம். எனவே, கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

முதியவரின் உயிரை காப்பாற்றிய இந்த அசாதாரண முயற்சியால், திருச்சி அரசு மருத்துவமனை மீண்டும் ஒரு முக்கியமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்