நாட்டில் போலி வைத்தியர்கள் அதிகரிப்பு – நளிந்த ஜயதிஸ்ஸ

Date:

நாட்டில் போலி வைத்தியர்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் எச்சரித்துள்ளார். இத்தகைய போலி வைத்தியர்களை கண்டறிய சுகாதார வைத்திய அதிகாரிகள் மூலமாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் பல்வேறு வைத்திய முறைகள் செயற்பாட்டில் உள்ளன. அந்த முறைகளின் வைத்தியர்கள் வைத்திய சபையில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், சிலர் பதிவு செய்யாத நிலையில் தவறான முறையில் செயற்பட்டு வருகின்றனர்.

போலி வைத்தியர்களை கண்டறிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது மக்கள் இதுகுறித்து தகவல்களை வழங்கினால், அவர்களிடம் சட்டரீதியான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.” என வலியுறுத்தியுள்ளார்.

மருந்து விநியோகத்தை ஒருங்கிணைக்க சில நிறுவனங்களுக்கு இடையே இணக்கப்பாடு தேவை எனவும், தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண மார்ச் மாதத்திற்குள் மருந்து விநியோக குறைபாடுகளை சரிசெய்ய முடியும் என நாங்கள் நம்புகிறோம்,” என அமைச்சர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்களின் நலனையும் மருத்துவத் துறையின் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வழியில் முன்னேறுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்