வவுனியா கல்மடு நீர்த்தேக்கத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை வன்னி இராணுவத்தின் 12ஆவது விஜயபா படைப்பிரிவின் படையினர் இன்று மீட்டுள்ளனர்.
குளம் வான்பாய்வதை பார்க்க வந்த ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது துவிச்சக்கரவண்டியுடன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நபரை இராணுவ வீரர்கள் மிகுந்த முயற்சியில் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.




